இந்த வலையில் தேடவும்

Thursday, July 22, 2010

பிதாமகர்...



இன்டர்நெட்டில் தியாகராஜர் கீர்த்தனைகள் எல்லாம் நிறையக் கிடைக்கின்றன ....


ஆனால் கர்நாடக இசையின் பிதாமகர் என்று கூறப்படும் 'புரந்தர தாசர்'
கீர்த்தனைகளைப் பார்ப்பது அரிதாக உள்ளது.



புரந்தர தாசர் கீர்த்தனைகள் பெரும்பாலும் 'இது தான் ராகம் , இது தான் தாளம்' என்று வகைப் படுத்தப் படாமல் உள்ளன. (தியாகராஜர் கீர்த்தனைகள் வரிக்கு வரி 'notation' கூட மாற்றமில்லாமல் பாடப் பட்டு வருகின்றன... )எனக்குத் தெரிந்து புரந்தர தாசரின் ஒரே கிருதி, சம்பந்தமே இல்லாத இரண்டு மூன்று ராகங்களில் கச்சிதமாகப் பாடப் படுகிறது.. சாகித்யத்திலும் கணிசமான வேறுபாடுகள் காணப் படுகின்றன..(இது ஏனென்று தெரியவில்லை... அவருக்குப் பின் வந்தவர்கள் ராகங்களை அமைத்திருக்கலாம்..)



'தய மாடோ' என்ற கல்யாணி ராகக் கீர்தனை ஒன்று உள்ளது.. அதை எங்கள் பெரியப்பா 'எத்தனை நாள் தான் 'ஜொய்' என்று கல்யாணியிலேயே பாடுவது?என்று அமிர்த வர்ஷினியில் பாடிக் காட்டினார். நன்றாக இருந்தது.


எனக்கு மிகவும் பிடித்த ஒரு தாசர் கீர்த்தனை இந்தப் பதிவில்...மக்களே! இறைவனைப் பூஜிக்க ஆடம்பரமான பூஜைகள் தேவை இல்லை... நம் அன்றாட வாழ்க்கையையே எப்படி பூஜையாக பாவிக்கலாம் என்று கூறுகிறார் தாசர்..


ராகம்: காம்போதி

மொழி: கன்னடம்


பல்லவி


சுலப பூஜெய மாடி பலவில்லதவரெல்ல

(உடம்பில் பலம் இல்லாதவர்களெல்லாம் இந்த சுலபமான பூஜையை செய்யுங்கள்)


அனுபல்லவி

நளின நாபன பாத நளின சேவகரெல்ல

<தாமரை உந்தியனான ஸ்ரீ ஹரியின் சேவகர்களே...>


சரணம்


1. இருளு ஹச்சுவ தீப ஹரிகெ நீராஜனவு

(நீங்கள் ராத்திரி ஏற்றும் தீபமே ஹரிக்கு மகா தீபம்)

மறு உடுவ வஸ்தரவே பரம மடியு

(நீங்கள் மாற்றி உடுக்கும் உடையே பூஜைக்குரிய நல்லுடை ஆகும்)

திருகாடி தணியுவுதே ஹரிகெ பிரதெக்க்ஷனெயு

(நீங்கள் நாளெல்லாம் அலைந்து திரிவதே ஹரிக்குச் செய்யும் வலமாகும்)

ஹொரளி மலகுவதெல்ல ஹரிகெ வந்தனெயு

(புரண்டு படுப்பதே ஹரிக்குச் செய்யும் வந்தனையாகும்)(சுலப)


----------------------------------------------------------------------------------------

2. நுடிவ மாதுகலெல்ல கடல ஷயனன ஜபவு

(பேசும் பேச்செல்லாம் ஹரியின் ஜபமாகும்)

மடதி மக்களு எல்ல ஒடனே பரிவார

(மனைவி மக்களே உடன் உள்ள பக்த பரிவாரங்கள்)

நடு மனெய அங்களவே உடுப்பி பூ வைகுண்ட

(நடு வீட்டின் முற்றமே உடுப்பி பூ வைகுண்டமாகும்)

எட பலத மனெயவரே கடு பாகவதரு

(இட வலம் உள்ள வீட்டவரே நல்ல பாகவதர்கள்)(சுலப)



-------------------------------------------------------------------------------------------


3. ஹீகெ அனு தின திளிது ஹிக்குவ ஜனர பவ

(இப்படி தினமும் பாவித்து நடப்பவரின் பிறவிப்)

ரோக பரிஹாரவு முர் ஜகதி சுகவு

(பிணி அகன்று மூன்று உலகங்களிலும் சுகம் உண்டாகும்)

ஹோகுத்திதெ ஆயு பேகதிந்தலி நம்ம

(இந்தப் பிறவி கழிந்து கொண்டு உள்ளது... எனவே சீக்கிரமாக)

யோகீஷ புரந்தர விடலன நெனெ நெனெது

(யோகிகளுக்கு அரசனான புரந்தர விடலனை நினைத்து)(சுலப)

~ சமுத்ரா

No comments: