இந்த வலையில் தேடவும்

Thursday, July 22, 2010

Temple tour



சமீபத்தில் கர்நாடக அரசின் KSTDC 'Temple tour' Package tour சென்றிருந்தேன். உங்களுக்குப் போக விருப்பம் என்றால் இங்கே click செய்யவும். ஹொர நாடு 'அன்ன பூர்ணேஸ்வரி' கோவிலில் இருந்து 'குக்கே சுப்ரமண்யா' வரை சுற்றிக் காட்டுகிறார்கள்...


எனக்கு என்னவோ எல்லா கோவில்களும் ஒரே மாதிரி தான் தோன்றின...

ரேஷன் கடை க்யூ போல நகர்ந்து சென்றால் கடைசியில் சில நொடிகளுக்கு the so called 'தரிசனம்' ... எந்த பரவசத்தையும் காட்டாத முகங்கள்... மகனுக்கு வேலை வேண்டும் என்றோ மகளுக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்றோ கணவனின் உடல் நிலை தேறவோ வருபவர்கள்.. (கடவுளை புரோக்கர் ரேஞ்சுக்கு எப்பவோ கொண்டு வந்து விட்டார்கள்) சிலர் பிக்னிக் வந்து விட்டு, போனால் போகிறது என்று பக்கத்தில் உள்ள பிரபலமான கோயில்களுக்கு வருபவர்கள்... இன்னும் சிலருக்கு 'God is just a Hobby' ...


மூகாம்பிகா கோவிலில் க்யூவில் நகரும் போது ஒரு அம்மணி பக்திப் பரவசத்துடன் 'ஸ்ரீ சக்ர ராஜ' பாடலை (க்யூவில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் ) சத்தமாக பாடிக் கொண்டு வந்தார். ( அது செஞ்சுருட்டியா சிந்துபைரவியா என்றெல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை... பக்திக்கு அதெல்லாம் தேவை இல்லை தானே?) அப்போது எனக்கு அருகே இருந்த நவ நாகரிகப் பெண்மணி ஒருவர் அதைப் பார்த்து விட்டு 'This is funny no?" என்றார் தன் அருகில் இருந்தவரிடம்.. . அம்மா தாயே? எது funny? பட்டுப் புடவை மற்றும் நகைகள் மிளிர AC காரில் வந்து இறங்கி விட்டு, ஸ்பெசல் க்யூவில் ரூபாயை வீசி விட்டு , படையப்பா நீலாம்பரி மாதிரி வந்து சாமி கும்பிடுவது தான் 'funny ! 'funniest stupidity!'

தனக்கென்று எந்த வேண்டுதல்களும் இல்லாமல் "தாயே உன்னைப் பார்க்கவே வந்தேன்... உனக்கு நன்றி சொல்லவே வந்தேன்... உன் தரிசனம் ஒரு 'கால் நொடி' கிடைத்தாலும் போதும் " என்ற மனப் பான்மையுடன் கோயிலுக்கு வருபவர்கள் மிக மிகக் குறைவு... அப்படி சிலர் வந்தாலும் 'funny objects' ஆகி விடுகிறார்கள் பாவம்...


அந்த 'சில நொடி' தரிசனத்தில் நான் எதை வேண்டுவது? (கோயில் ஊழியர்கள் வேறு நம்மை என்னவோ சாமி சிலையை வேவு பார்த்து விட்டு ராத்திரி வந்து திருடி விடுபவர்கள் போல பாவித்து 'உம், போங்க போங்க என்றோ ஹோகி ஹோகி என்றோ ஜெருகண்டி ஜெருகண்டி என்றோ விரட்டி விடுகிறார்கள்)... மணிக்கணக்கில் க்யூவில் நின்று வந்தவர்களுக்கு எப்படி இருக்கும்?


tour போகும் முன்பு அம்மா 'அப்பாவுக்கு சரியாகட்டும் னு' வேண்டிக்கோ என்று கூறி அனுப்பினார். பாட்டி ' சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள் என்றார்' என் ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு இளைஞரோ ' செகண்ட் floor - இல் இருக்கும் அந்த' Figure ' எனக்கு செட் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள் என்று கூறி அனுப்பினார். அந்த ஒரு நொடி தரிசனத்தில் நடக்கும் அலப்பறையில் எனக்கு எல்லாமே மறந்து விட்டது... எங்கே சாமி அடுத்தவனைப் பார்த்து விடுமோ என்ற பாவனையில் முன்னே இருப்பவரைத் தள்ளி விடுகிறார்கள்.. ச்சே!


"எது கேட்பதற்குத் தகுதியானதோ அதை மற்றவர் கொடுக்க முடியாது. எதை மற்றவர் (கடவுளே ஆனாலும் )கொடுக்க முடியுமோ அது தகுதி அற்றது. "That which is asked is not worth asking...That which is worth asking cannot be given"


"மாடினைக் கோருவேனோ மகிமையைக் கோருவேனோ

நாடினைக் கோருவேனோ நலங்களைக் கோருவேனோ

ஈடிணை அற்ற ஈசா! இரத்தலின் ஈய வொண்ணா

வீடினைக் கோருவேனோ விளங்கிலேன் விளங்கிலேனே'


என்று கவிதை பாடத் தோன்றுகிறது..


~சமுத்ரா





1 comment:

விஸ்வநாத் said...

// ஸ்பெசல் க்யூவில் ரூபாயை வீசி விட்டு //


ஏதோ ஒரு கோவிலில், 'ஸ்பெசல் க்யூ' நுழைவாயிலில் படித்தேன்;
கோவில் நிர்வாகத்துக்கும், பக்தர்களின் சேவைகளுக்கும் பணம் தேவைப்படுகிறது;