இந்த வலையில் தேடவும்

Monday, August 30, 2010

சுகர் ஃப்ரீ யும் குரங்கு பொம்மையும்.....

ஊருக்குப் போகையில்

பாட்டிக்கு ஒரு

எம். எல். வி காசெட்...

தம்பிக்கு ஒரு

டி-ஷர்ட்...

அக்காவுக்கு ஒரு பர்ஸ்...

அக்காவின் குழந்தைக்கு

ஒரு பிரவுன் கலர்

குரங்கு பொம்மை...

அப்பாவுக்கு ஒரு

சுஜாதா புத்தகம்....

பெரியம்மாவுக்கு சுகர்-ஃப்ரீ ....

இத்தனையும் வாங்கிச் சென்றேன்..

அம்மாவைப் பார்த்து

உனக்கு ஏதும் வாங்கி வரவில்லையே என்றேன்....

'என் மகன் -

சம்பாதித்து

இத்தனையையும் வாங்கி வருகிறான்

என்ற சந்தோஷத்தை

எனக்கு வாங்கி வந்திருக்கிறாயே

என்றாள் அம்மா....

~சமுத்ரா

3 comments:

Abi said...

It reminded me of my mom.Gud one!!

Unknown said...

அதுதாங்க அம்மாங்கிறது!

Dr.Dolittle said...

ப்ச் ... நெஞ்சை தொட்டுட்டீங்க சார் , நீங்க சொன்ன மாதிரி உங்கள் உங்கள் இதயத்தை மட்டும் அல்ல என் இதயத்தையும் கணக்க வைத்தது , அம்மாவின் அன்புக்கு ஈடே இல்லை சார் , அறிவியலுக்கே சவால் விடும் அன்பு சார் அது