இந்த வலையில் தேடவும்

Tuesday, September 7, 2010

அஜ்ஜிபிக்கா...

எனக்கு ஒரு வேலை கிடைத்தது....

குழந்தைகளுக்கான உலகத்தைப்

படைப்பவன் வேலை...

வேலை எளிதாகத் தான் இருந்தது...

பெரிதாக ஒன்றும் இல்லை...

வீட்டுக்கு வெளியில் ஒரு பூச்சாண்டி,

கண்ணைக் குத்த ஒரு உம்மாச்சி ,

சாப்பிடாவிட்டால் வந்து கடிக்க ஒரு பல்லிப் பூச்சி,

தோ தோ, மியாவ், ஆனை, ஆட்டோ

எல்லாவற்றையும் படைத்து விட்டு

வந்து அமர்ந்தேன்...

குழந்தை திடீரென்று

அஜ்ஜிபிக்கா வேணும் அஜ்ஜிபிக்கா வேணும்

என்று அழ ஆரம்பித்தது...

அஜ்ஜிபிக்காவை

எப்படிப் படைப்பது

என்று -

சத்தியமாகத்

தெரியவில்லை எனக்கு....

~சமுத்ரா

No comments: