இந்த வலையில் தேடவும்

Tuesday, October 12, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-6


கோவணத்தாண்டி சொல்வது:

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே
...

நேற்று பேய்மழை கொட்டித் தீர்த்து விட்டிருந்தது....சென்னையின் ரோடுகளில் நீந்தி வருவதற்குள் லேட்டாகி விட்டது....

உள்ளே விக்ரம் ஒரு சிறுவனின் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தார் " டாக்டர், இவன் விளையாடறதே இல்லை...எப்பவும் ஏதோ சிந்தனையிலேயே இருக்கான்" என்று சொல்லிக் கொண்டிருந்தனர்....

நான் உள்ளே நுழைந்ததும் "மார்னிங் தரங் " என்றார்...

நான் அந்த சிறுவனைப் பார்தேன்....அப்போதும் ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தான்.....விக்ரம் அவர் அப்பாவிடம் திரும்பி "சார் எல்லா அப்பா அம்மாக்களும் தங்கள் பிள்ளை சச்சினாட்டம் வரணும், தோனியாட்டம் வரணும் னு எதிர்பார்த்தா எப்படிங்க? இப்ப நமக்கெல்லாம் ஒரு ரமண மகரிஷி, ஒரு விவேகானந்தர் போன்றவர்கள் கண்டிப்பா தேவைப்படுது...ஒவ்வொரு குழந்தையின் குணம் ஒவ்வொரு மாதிரி....நீங்க சொல்றதப் பார்த்தா அவன் நல்லா படிக்கறான்... பின்னாளில் ஜே .கே. மாதிரி ,தாகூர் மாதிரி பெருசா வரலாம்....கொஞ்சம் விட்டுப் புடிங்க....எதுக்கும் ஒரு வாரம் கவுன்சிலிங் வரட்டும்" என்றார்...

அவர்கள் சென்றதும் "மார்னிங் பாஸ், உள்ளே வந்தப்ப நீங்க சீரியசா முகத்தை வெச்சுகிட்டிருந்ததைப் பார்த்தப்போ அந்தப் பையனுக்கும் ஏதோ கனவில் ஆந்தை வந்திருச்சோன்னு நினைச்சேன்" என்றேன் ...

"தரங் கனமழை விட்டாலும் உன் கடிமழை விடலையே" என்றார் விக்ரம்...

"என்ன பண்றது பாஸ், இதெல்லாம் நம்ம ரத்தத்தில் ஊறிய பழக்கம் " என்ற நான் "ஆமாம் நேத்துலேருந்து ஒரு சந்தேகம்" என்றேன்...

"சொல்லு" என்றார் விக்ரம்..

"மஹிதரை அந்த கழுகு மலைக்கு வரவைப்பது தானே அந்த கண்ணுக்குத் தெரியாத எனிமீசோட திட்டம்?" என்றேன்

"அப்படிதான் தெரியுது"

"அப்படின்னா அந்த ஓலையை நாம பார்த்தது ஒரு தற்செயலான விஷயம் தானே? அவங்களுக்கு எப்படி நம்ம அந்த The Eagle
ங்கற புக்கைக் கண்டிப்பா பார்ப்போம்னு தெரியும்?மனுஷங்க நாம சாதாரணமா ஒரு லெட்டரை பாக்ஸ்ல போட்டுட்டு அது போயிருச்சான்னு உள்ள வரைக்கும் கை விட்டுப் பார்க்கறோம்...அதன் படி பார்த்தா, அவங்க அந்த ஓலையையோ இல்லை புக்கையோ மஹிதர் டேபிள் மேலயே கொண்டு வந்து வச்சிருக்கலாமே?did they believe in chance ? இதைப் பார்த்தா அவங்க அவங்களோட இன்டென்ஷன்ல ஒழுங்கா இல்லையோன்னு நினைக்கத் தோன்றது" என்றேன்.....

"நல்ல கேள்வி" என்ற விக்ரம் தொடர்ந்தார்...

"இதைப் பார்த்தா தான் எனக்கு அவங்க அவங்களோட
இன்டென்ஷன்ல ரொம்ப தீவிரமா இருக்கிறாங்கன்னு தோணுது"

"how ?" என்றேன்....


"நீ சொல்றது மாதிரி அவங்க அந்த ஓலையையோ புத்தகத்தையோ மஹிதர் டேபிள் மேல வச்சிருந்தா தான் நாம் அதைப் பார்க்கறதுக்கு வாய்ப்புகள் குறைவு....பக்கத்தில் இருக்கற எதையுமே நாம் சரியா கவனிக்க மாட்டோம்...மேலும் நம்ம மனசுல நினைக்கறதுக்கும் வெளியில் நடக்கும் events -
க்கும் ஒரு attraction இருக்கும்....சில சமயம் ஏதோ ஒரு பாட்டை நாமே அறியாம ஹம் பண்ணிக் கொண்டிருப்போம்.... டிவி யைப் போட்டா அந்த பாட்டு ஓடிக் கொண்டிருக்கும்.....எங்க தாத்தா ஒருத்தர் இருந்தார்...அவருக்கு மியூசிக் னா உயிரு....சாயங்காலங்களில் ஒரு ராகத்தை,for example , பந்துவராளி, சும்மா ஆலாபனை பண்ணி பண்ணி எங்களை கடுப்பேற்றிக் கொண்டிருப்பார்....பிறகு ரேடியோயைப் போட்டால் 98 % பந்துவராளி கேட்கும்...எப்படி தாத்தா என்று கேட்டால் என்னவோ தோணித்து " என்பார்...அதாவது வெளியில் நடக்கக் கூடிய விஷயங்கள் எப்படியோ அதற்கு முன்னரே நம் மனசுக்கு எட்டி விடும்...இது பொதுவாக எல்லா மனுசங்களுக்கும் இருக்கும்னாலும் ஒரு சிலரிடம் டாமினண்டா இருக்கும்....இன்னும் உனக்கு உதாரணம் வேணும்னால் ஐன்ஸ்டீன் ரிலேடிவிட்டி கண்டுபுடிச்சப்ப ஒரு ஏழெட்டு பேர் அதே ஆராச்சியில் ஈடுபட்டிருந்தாங்க...கிட்டத் தட்ட அதே முடிவுகளை கண்டுபிடிச்சிருந்தாங்க.....ஐன்ஸ்டீன் கொஞ்சம் முந்திக்கிட்டார்...அவ்ளோ தான் அதே மாரி மார்கோனி ரேடியோ கண்டுபுடிச்சப்ப கூட நாலஞ்சு பேர் அதே மாதிரி ஆராய்சிகளில் ஈடுபட்டு இருந்தாங்க...அவரோட நண்பர் ஒருத்தர் மார்கோனி ரேடியோ மாடலை அவருக்கே தெரியாமல் பேடன்ட் ஆபீசில் சென்று தக்க டைம்ல பதிவு செய்ததால் புகழ் அவருக்கு கிடைத்தது....
இதே மாதிரி தான் நம்ம எல்லார் மனசுலயும் இருந்த "கழுகு" நம்மை அந்த கழுகு புக்கை நோக்கி இழுத்துப் போனது....மஹிதரோட எதிரிகள் மனுஷ மனத்தைப் பத்தித் தெரிஞ்ச புத்திசாலிகள் போல் தெரிகிறது"...என்று கூறி முடித்தார்...

"பாஸ் கலக்கறீங்க" அடுத்த ஜென்மத்துல நம்ம ரோல்ஸ கொஞ்சம் மாத்திக்கலாமா? நான் எத்தனை நாள் தான் ஸ்டுபிட் தரங்கிணியாகவே இருக்கறது? என்றேன்...

"தரங்கிணி இன்னொன்னு தெரியுமா? மனுஷன் சாகறப்போ எதை நினைக்கிறானோ அடுத்த பிறவியில் அதுவாகத் தான் பிறப்பானாம்"

"அப்ப கண்டிப்பா மஹிதர் கழுகு தான்....இப்ப இருந்தே அவர் "எலி சாப்பிடுவது எப்படி"ன்னு ட்ரைனிங் எடுத்துக்கணும் என்றேன்...

"அதெல்லாம் சரி கூகுள்ல கழுகு மலை எங்க இருக்குன்னு தேடச் சொன்னனே, அது ஒண்ணையாச்சும் உருப்படியா பண்ணியா?" என்றார் விக்ரம்....

"என்ன பாஸ் என்னை என்ன ராத்திரி சீரியல் பாத்துட்டு தூங்குற பார்டின்னு நெனச்சீங்களா? பிரின்ட் அவுட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன்" என்றேன்....

"ஓகே எங்க இருக்கு சொல்லு " என்றார்

"அது திருநெல்வேலிக்கு பக்கத்துல சங்கரன் கோவிலுக்கும் கோவில்பட்டிக்கும் நடுவுல இருக்கு.....ச்சே சொன்னது தான் சொன்னான்...அமெரிக்கால கூட eagle - town னு ஒண்ணு இருக்காம்...அங்க வரச் சொல்லி இருக்கக் கூடாதா?உங்க தயவுல நான் U .S பார்த்திருக்கலாம்....பாஸ் லோக்கல் பார்டிங்க பாஸ்...."என்றேன்

"லோக்கல் பார்டியா பாரின் பார்டியான்னு போய் பார்த்தாதான் தெரியும்" என்றார்....

"சார் மஹிதர் கிட்டேருந்து அவங்க என்ன எதிர் பார்க்கறாங்க? பணமா?" என்றேன்

"their intentions are not yet clear " என்றார்

அப்போது அவர் செல்போன் ஒலித்தது ...."சிவா தான்" என்றார்

அவர் பேசியதும் "என்னவாம் பாஸ் ?" என்றேன்

"கழுகு மலைக்கெல்லாம் போக வேண்டாமாம்....இதை இப்படியே கொஞ்ச நாளைக்கு விட்டு விடுவோம்.....எதிரிகள் அடுத்த மூவ் எப்படி பண்றாங்கன்னு பார்க்கலாம்னான்" என்றார்...

ஓகே பாஸ் வேலையைப் பார்க்கலாம்....ஜுஜுபி ஓலைக்கு எல்லாம் பயந்துகிட்டு என்றேன்.....


திடீரென்று எங்கிருந்தோ ஒரு பலமான காற்று வீசியது.... நான் கொண்டு வந்திருந்த பேப்பர்கள் சில ஜன்னல் வழியே பறந்தன...மீதம் இருந்த பேப்பர்களைப் பொறுக்கி மேசை மீது வைத்தேன்,,,,அதில் இருந்த கழுகாசல மூர்த்தியின் படம் எங்களைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது....


~தொடரும்



முந்தைய அத்தியாயங்கள்

1
2
3
4
5








2 comments:

எல் கே said...

good keep it up

Anonymous said...

You handled the script well. Keep it up. You are eligible for writing T>V serials.